December 5, 2025, 5:09 PM
27.9 C
Chennai

ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு?: மத்திய நிதியமைச்சர்..

Tamil News large 3114197 - 2025

தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காமரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரியாத கலெக்டரிடம் கண்டிப்பு காட்டிய அவர், மத்திய அரசு வழங்கும் மானியம், மாநில அரசு வழங்கும் மானியம் குறித்து விளக்கி கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.,வின் லோக்சபா பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஜகீராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமரெட்டி மாவட்டம், பன்ஸ்வாடா நகரருகே உள்ள பிர்கூர் கிராம ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன், மாவட்ட ஆட்சியர் ஜித்தேஷ் பாட்டீல் உடன் இருந்தார். அவரிடம், ரேஷன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை எனக்கேள்வி எழுப்பினார். மேலும் நிர்மலா சீதாராமனின் பல கேள்விகளுக்கு கலெக்டரிடம் பதில் ஏதும் இல்லை.

ரேஷன் அரிசியில் மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கும் அவரிடம் சரியான பதில் சொல்லாமல் தடுமாறினார்.

இதனால், கோபமடைந்த நிர்மலா சீதாராமன், தெலுங்கானா கேடரில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நீங்கள். உங்களது பதிலை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும் அரைமணி நேரத்தில் சரியான பதிலை தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் என்றார்.

பின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றிற்கான நிதியில் பெரும்பங்கை மத்திய அரசு வழங்குகிறது. அரிசியின் மொத்த விலையான ரூ.35ல் மத்திய அரசு ரூ.28 மானியமாகவும், மாநில அரசு ரூ.6 மானியமாகவும் வழங்குகிறது. மக்கள் 1ரூபாய்க்கு பெற்று கொள்கின்றனர்.
போக்குவரத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தெலுங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே வழங்குவதாக கூறுகிறது. 2020 மார்ச் – ஏப்ரல் மாதம் முதல் கோவிட் காலத்தில் இருந்து மாநில அரசு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஏதும் இல்லாமல், அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வீடியோவை பா.ஜ., தலைவர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, அது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories