இலங்கை போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க ஐ.நா. காரணமாகிவிடக் கூடாது: ராமதாஸ்

சென்னை: போர்க் குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க ஐ.நா. காரணமாகி விடக் கூடாது என பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என ஆணையத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை ஒத்துழைக்காத நிலையில், உலகெங்கும் இருந்து ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டிருப்பதும், அதற்கு இந்தியாவின் ஆதரவு கோரப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.நா. விசாரணை அறிக்கை மூலம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போர்க் குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் வழங்கிய அறிவுரைகளில் ஒன்றைக்கூட இலங்கை மதிக்கவில்லை. இந்நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை 6 மாதங்களுக்கு ஆணையம் தள்ளி வைத்தது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த தாமதத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. இலங்கை மீதான போர்க் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டுக்குள் சென்று விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே அறிக்கை தாக்கலை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories