உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் சதாசிவம். அவர் மோடி அரசில் லாபி செய்து, கேரள கவர்னர் ஆனதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அவரது நியமனத்துக்கு கேரள காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதையும் மீறி அந்த நியமனம் நடந்தது. இத்தகைய சூழ்நிலையில் போன வாரம் தில்லியில் பிஜேபி தலைவர் அமீத் ஷாவின் இல்லத் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் சதாசிவமும் கலந்து கொண்டார். அப்போது அவர், பாஜக தலைவர்களிடம் தன்னை தில்லி ஆளுநனராகவோ, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராகவோ நியமிக்குமாறு லாபி செய்தாராம். தில்லி ஆங்கில நாளேடு ஒன்று இப்படி எழுதியுள்ளது. அடடே.. அப்படியா?
தில்லி ஆளுநர் பதவிக்கு அடிபோடுகிறாரா சதாசிவம்?
Popular Categories


