‘திருடர் குலத் திலகமே! ஊழலின் மறு உருவமே!’ – கரூரைக் கலக்கிய போஸ்டர்கள்; கதி கலங்கிய போலீஸார்!

Published:

posters in karur against senthil balaji - 2026
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கரூர் நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டது

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக.,வினர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கரூர் நகரில் பாஜக மாநில தலைவரைப் பற்றி திமுகவினர் அவதூறாக போஸ்டர் ஒட்டிய போது காவல்துறை கண்டு கொள்ளாமல் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது. ஆனால் திமுகவின் ஊழல் பற்றி நோட்டீஸ் ஒட்ட முயற்சி செய்த போது கடுமையான முறையில் காவல்துறை தடுத்து நிறுத்தினர். இதை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது… என்று தெரிவித்தனர்.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பிஜிஆர் நிறுவனத்துடன் ஏன் மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது எனவும், இதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து அந்த நிறுவனத்துடன் 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும், அது அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

posters in karur - 2026

மேலும், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் கடும் மோதலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கரூர் மாவட்ட பாஜக சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில், “திருடர் குல திலகமே! ஊழலின் மறு உருவமே!, அணிலுக்கு அடித்த ஜாக்பாட், 5000 கோடி அதிபர் ஆக்கிய பிஜிஆர் நிறுவனம்” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

தராசின் ஒருபுறம் பணங்கள் குவிக்கப்பட்டது போலவும், மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பாஜக சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து அகற்றும்படி உத்தரவிட்டனர்.

இரவோடு இரவாக இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இந்த போஸ்டர்கள் தற்போது பாஜகவினரின் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img