December 5, 2025, 1:13 PM
26.9 C
Chennai

‘திருடர் குலத் திலகமே! ஊழலின் மறு உருவமே!’ – கரூரைக் கலக்கிய போஸ்டர்கள்; கதி கலங்கிய போலீஸார்!

posters in karur against senthil balaji - 2025
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கரூர் நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டது

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக.,வினர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கரூர் நகரில் பாஜக மாநில தலைவரைப் பற்றி திமுகவினர் அவதூறாக போஸ்டர் ஒட்டிய போது காவல்துறை கண்டு கொள்ளாமல் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது. ஆனால் திமுகவின் ஊழல் பற்றி நோட்டீஸ் ஒட்ட முயற்சி செய்த போது கடுமையான முறையில் காவல்துறை தடுத்து நிறுத்தினர். இதை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது… என்று தெரிவித்தனர்.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பிஜிஆர் நிறுவனத்துடன் ஏன் மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது எனவும், இதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து அந்த நிறுவனத்துடன் 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும், அது அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

posters in karur - 2025

மேலும், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் கடும் மோதலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கரூர் மாவட்ட பாஜக சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில், “திருடர் குல திலகமே! ஊழலின் மறு உருவமே!, அணிலுக்கு அடித்த ஜாக்பாட், 5000 கோடி அதிபர் ஆக்கிய பிஜிஆர் நிறுவனம்” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

தராசின் ஒருபுறம் பணங்கள் குவிக்கப்பட்டது போலவும், மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பாஜக சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து அகற்றும்படி உத்தரவிட்டனர்.

இரவோடு இரவாக இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இந்த போஸ்டர்கள் தற்போது பாஜகவினரின் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories