December 8, 2025, 2:38 PM
28.2 C
Chennai

இலவச அரசு‌பேருந்தில் டிக்கெட் எடுக்க விரும்பும் பெண்களிடம் கட்டணம் பெறலாம்?

தமிழகத்தில் தினமும் சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடியாது.இலவச பயணம் வேண்டாம் என்று டிக்கெட் எடுக்க விரும்பும் பெண்களிடம் கட்டணம் பெறலாம் என தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

images 67 - 2025

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 8-ந்தேதி முதல் சாதாரண பஸ்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் பஸ்சில் பயணம் செய்ய விரும்பவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கண்டக்டர் வேறு வழியின்றி அந்த மூதாட்டியிடம் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுத்தார். இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சகபயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பரபரப்பாக வைரலானது.

இதையடுத்து பஸ்சில் டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பஸ் கண்டக்டர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் இலவச பஸ் டிக்கெட் விவகாரத்தில் பெண் பயணிகளுக்கும். கண்டக்டர்களுக்கும் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க இலவச பயணம் வேண்டாம் என்று டிக்கெட் எடுக்க விரும்பும் பெண் பயணிகளிடம் கட்டணம் பெறலாம் என்று அரசு பஸ் கண்டக்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது.

ஆனால் பெண் பயணிகள் தங்களுக்கு இலவச பயணம் வேண்டாம் என்று டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தால் எங்களால் மறுக்க முடியவில்லை. இதையும் படியுங்கள்: ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாமியார் போலீசில் புகார் தினமும் 2 அல்லது 3 பயணிகளாவது பணம் கொடுத்து டிக்கெட் கேட்கிறார்கள்.

நாங்கள் மறுத்தால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுபற்றி நாங்கள் எங்கள் கிளை அதிகாரிகளிடம் பிரச்சினைகளை எடுத்து சொன்னோம். அப்போது ‘டிக்கெட் கட்டணத்துக்கு பெண்கள் பணம் கொடுக்க விரும்பினால் பெற்றுக் கொள்ளு மாறு கூறினார்கள்’ என்றார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தமிழகத்தில் தினமும் சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். சாதாரண பஸ்களில் பயணம் செய்பவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கு மாநில அரசு 16 ரூபாயை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்துகிறது. இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிப்பது குறித்து நாங்கள் கண்டக்டர்களுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை.

ஏனெனில் போக்குவரத்து துறையில் அதுபோன்ற வழிகாட்டுதல்கள் இல்லை. விதிமுறைப்படி இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories