ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் செம்மரம் பறிமுதல்- 44 பேர் கைது..

1800173 redsandalwood - 2026

திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 44 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் செம்மரம் கடத்தி செல்வதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வரர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. ராமராஜூ மேற்பார்வையில் பாக்ராப்பேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம், புத்தூர் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், வடமால பேட்டை ராமாஞ்ச நேயலு, நாராயண வனம் எஸ்.ஐ பரமேஷ் நாயக் உள்ளிட்ட போலீசார் 2 குழுக்களாக பிரிந்து திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. திடீரென போலீசாரை பார்த்ததும் வாகனங்களில் இருந்து சிலர் கீழே குதித்து ஓட முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 2 டிரைவர்கள் மற்றும் 42 கூலி தொழிலாளர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தப்பிச் சென்றனர். லாரியில் இருந்து 11 கோடாரிகள், 32 ரம்பம், 2 லாரி, 1 கார், 2.6 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 81 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள் கூலி தொழிலாளர்களை சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டி சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வடமாலைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories