சாலை மண்ணை அகற்றியதால் மரம் விழுந்து பாதிக்கப் பட்டவர்; சிகிச்சைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

hindumunnani - 2026

திருநெல்வேலி மாவட்டம் விகே புரம் பகுதியில் நேற்று (02/12/2022) மாலை முருகன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 4 மணி அளவில் மரம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலை வேலை நடைபெறுவதற்காக அந்த சாலையில் இருந்த மண்ணை அகற்றியதால் (சாலையின் இருபுறமும்) அந்த மரம் சாய்ந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதில் அவர் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவாறு பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு MRI ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதன் பின்னர் தான் அதற்கான சிகிச்சை கொடுக்க முடியும் என்று சூழ்நிலை இருக்கும் போதும் வரும் செவ்வாய்க்கிழமை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அரசிடம் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து நடந்துள்ள சூழ்நிலையில் மேலும் மருத்துவ நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இப்போது சிகிச்சையிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் ஓர் உயிர் காப்பாற்றப்படும். தமிழக முதல்வரும், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணயம் அவர்களும் கவனத்தில் கொண்டு ஆவன செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு கேட்டுக்கொள்கிறேன்.

  • வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணியின் மாநிலத் துணை தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories