சீன தூதரகம் மூலமாக ரூ. 1.35 கோடி பெற்ற ராஜீவ் அறக்கட்டளை: அமித்ஷா விளக்கம்!

1723147 amith sha - 2026

சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று (டிச.13) பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லிமென்ட் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்ட அறிக்கை: இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பார்லிமென்டில் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வார் எனக்கூறிய பிறகும் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.

தொடர்ந்து கேள்வி நேரத்தின் பட்டியலில் உள்ள 5வது கேள்வியை பார்த்த போது காங்கிரஸ் கட்சியின் பயம் எனக்கு தெரியவந்தது. காங்கிரஸ் எம்.பி., ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கான பதிலை நாங்கள் தயாராக வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் பார்லிமென்ட் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினர். பார்லிமென்ட் செயல்பட்டிருந்தால், 2005 – 06 மற்றும் 2006 – 07 காலத்தில் ராஜிவ் அறக்கட்டளை, சீன தூதரகத்திடம் இருந்து ரூ1.35 கோடி பணம் பெற்றுள்ளது. இது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு(எப்சிஆர்ஏ) எதிரானது என்ற பதிலை கூறியிருப்பேன். விதிமீறல் காரணமாக ராஜிவ் அறக்கட்டளையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி, மத்தியில் ஆட்சியில் உள்ளவரை, இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலத்தை கூட அன்னியர்கள் ஆக்கிரமிக்க முடியாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

அமித்ஷாவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை பதிலளிக்கவில்லை. ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளார். இந்த அறக்கட்டளை மீதான புகார் தொடர்பாக விசாரணை தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்த அமைச்சர்கள் குழு விசாரணை நடத்தியது.

தொடர்ந்து, அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட எப்சிஆர்ஏ லைசென்சை, மத்திய அரசு ரத்து செய்தது.

பார்லிமென்ட் வெளியே நிருபர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: ராஜிவ் அறக்கட்டளையின் எப்சிஆர்ஏ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விகளை தவிர்க்கவே பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. சீனா மீதான நேருவின் காதலால்தான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் பதவி தியாகம் செய்யப்பட்டது என்று அவர்
கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories