December 6, 2025, 10:54 AM
26.8 C
Chennai

ராஜபாளையம் அருகே சீனாவில் இருந்து வந்த தாய் மகளுக்கு கொரோனா..

IMG 20221228 WA0056 - 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வத்றாப் பகுதியில் சீனாவில் இருந்து வந்த தாய் , மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் ஆய்வு செய்தார்,கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9:40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களுள், சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மனைவி மற்றும் மகள் தங்கியிருந்துள்ளனர். வேலையை முன்னிட்டு சுப்பிரமணியம் ஜெர்மனி சென்ற நிலையில், மனைவி மற்றும் மகள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து, இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களது ஊரான இளந்தைகுளம் கிராமத்தில் அவர்களது வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் வேறு ஏதும் தொந்தரவு இருக்கிறதா என்று விசாரணை நடத்திய நிலையில் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு உருமாறிய பிஎஃப்7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தாய் மற்றும் மகளின் பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories