கடையநல்லூர் : ஜெயலலிதா பிறந்த நாள் விழா நெல்லை மாவட்டத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அதிமுகவினர் செய்திருந்தனர். கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜெயலலிதா பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

