ஸ்ரீதேவி உடலை விடுவிக்க ‘கிளியரன்ஸ் தேவை’; இந்திய தூதரகத்திடம் துபை போலீஸ் கறார்; பகீர் கிளப்பும் தூதர்

மும்பை:

துபையில் கடந்த சனிக்கிழமை இரவு காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குக் கொண்டு வருவதில் மேலும் சிக்கலும் தாமதமும் நீடிக்கிறது.

இதுகுறித்து இந்திய தூதரகத்திடம் கறார் காட்டிய துபை போலீஸ், மேலும் ஒரு கிளியரன்ஸுக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து தகவல் அளித்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலை விடுவிப்பதில், எந்த மாதிரியான கிளியரன்ஸுக்கு துபை போலீஸ் காத்திருக்கிறது என்ற தகவலைக் கூற மறுத்துவிட்டார்.

boney kapoor sridevi - 2026

இந்த விவகாரத்தை விசாரித்த துபை போலீஸார், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியலறையில் மயங்கிய நிலையில் விழுந்து உயிரிழந்தார் என்றும், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் கூறியது.

மேலும், துபைக்கும் மும்பைக்கும் அடுத்தடுத்து பறந்து சென்று வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் இந்த வழக்கை முதலில் விசாரித்த துபை போலீஸாரும், பின்னர் விசாரணைக்கு ஏற்ற துபை நீதிமன்ற அரசு வழக்கறிஞரும் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதை அடுத்து போனி கபூரின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படுவதாக, கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

sridevi - 2026

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் நீடிப்பதாகக் கூறினார். இது குறித்து அவர் தெரிவித்த போது, இது போன்ற விவகாரங்களில், உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில், சட்ட நடைமுறைகளின் படி சாதாரணமாக 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தார்.

மேலும், ஸ்ரீதேவி உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சந்தேகங்கள் குறித்து கருத்து தெரிவித்த நவ்தீப் சூரி, ஒரு புகழ்பெற்ற நடிகை திடீரென மறைந்ததால் அது குறித்து தகவல் பெற்று வெளியிடுவதில் ஊடகங்களுக்கு இருக்கும் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பி, செய்திகளைப் பரப்புவது எந்த வகையிலும் உதவாது. நாங்கள் இந்த மரணத்தில் எழுந்துள்ள விவகாரத்தை வல்லுநர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்களே இதற்கு பொறுப்பேற்பார்கள் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories