ஸ்ரீதேவி உடலை விடுவிக்க ‘கிளியரன்ஸ் தேவை’; இந்திய தூதரகத்திடம் துபை போலீஸ் கறார்; பகீர் கிளப்பும் தூதர்

மும்பை:

துபையில் கடந்த சனிக்கிழமை இரவு காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குக் கொண்டு வருவதில் மேலும் சிக்கலும் தாமதமும் நீடிக்கிறது.

இதுகுறித்து இந்திய தூதரகத்திடம் கறார் காட்டிய துபை போலீஸ், மேலும் ஒரு கிளியரன்ஸுக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து தகவல் அளித்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலை விடுவிப்பதில், எந்த மாதிரியான கிளியரன்ஸுக்கு துபை போலீஸ் காத்திருக்கிறது என்ற தகவலைக் கூற மறுத்துவிட்டார்.

boney kapoor sridevi - 2026

இந்த விவகாரத்தை விசாரித்த துபை போலீஸார், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியலறையில் மயங்கிய நிலையில் விழுந்து உயிரிழந்தார் என்றும், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் கூறியது.

மேலும், துபைக்கும் மும்பைக்கும் அடுத்தடுத்து பறந்து சென்று வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் இந்த வழக்கை முதலில் விசாரித்த துபை போலீஸாரும், பின்னர் விசாரணைக்கு ஏற்ற துபை நீதிமன்ற அரசு வழக்கறிஞரும் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதை அடுத்து போனி கபூரின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படுவதாக, கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

sridevi - 2026

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் நீடிப்பதாகக் கூறினார். இது குறித்து அவர் தெரிவித்த போது, இது போன்ற விவகாரங்களில், உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில், சட்ட நடைமுறைகளின் படி சாதாரணமாக 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தார்.

மேலும், ஸ்ரீதேவி உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சந்தேகங்கள் குறித்து கருத்து தெரிவித்த நவ்தீப் சூரி, ஒரு புகழ்பெற்ற நடிகை திடீரென மறைந்ததால் அது குறித்து தகவல் பெற்று வெளியிடுவதில் ஊடகங்களுக்கு இருக்கும் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பி, செய்திகளைப் பரப்புவது எந்த வகையிலும் உதவாது. நாங்கள் இந்த மரணத்தில் எழுந்துள்ள விவகாரத்தை வல்லுநர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்களே இதற்கு பொறுப்பேற்பார்கள் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories