செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி மேட்டுத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகூர்கனி,ஜீனத் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் காதர் முகைதீன் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாட்டிலிருந்து 2 மாத விடுமுறையில் வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தீடிரென காதர் முகைதீன் இறந்துள்ளார்.உடனே அவனது பெற்றோர் தனது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.அதனைத்தொடர்ந்து இறந்த காதர்முகைதீனை பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.இந்நிலையில் காதர் முகைதீன் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறைக்கும்,வருவாய் துறைக்கும் புகார்கள் சென்றன.இதனைத்தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் செல்வகுமார் தலைமையில் செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் முன்னிலையில் காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.இதன்காரணமாக அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது.போலீசார் குவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞர் மர்மச்சாவு
Popular Categories


