சென்னை பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் இன்று திங்கள் கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 1972 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்’ மனிதரில் இத்தனை நிறங்கள ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்மயுத்தம் படத்தை இயக்கியவர் இவரே. ராஜேஷ்-லட்சுமி நடித்த ‘சிறை,’ தாலிதானம், மற்றும் தவம், மனக்கணக்கு, சந்தோஷ கனவுகள், கூட்டுப்புழுக்கள், வரம், பத்தினி பெண் உள்பட 27 படங்களை இயக்கி உள்ளார். பத்தினி பெண் என்ற பட த்தில் சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கதை வசனத்திற்கு இவருக்கு 2 மாநில விருது கிடைத்தது. சர்க்கரை நோயால் பாதிகப்பட்ட இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதற்காக, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை சக்தி மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள வீ ட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த இயக்குனர் ஆர்.சி.சக்திக்கு லட்சுமி என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி. நாடக கலைஞராக வாழ்க்கையை துவங்கியவர் சினிமாவில் காலடி பதிக்க தொடங்கினார். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை போரூர் மின்சார மயானத்தில் ஆர்.சி.சக்தியின் உடல் தகனம் செயப்பட உள்ளது.

