சென்னை பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் இன்று திங்கள் கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 1972 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்’ மனிதரில் இத்தனை நிறங்கள ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்மயுத்தம் படத்தை இயக்கியவர் இவரே. ராஜேஷ்-லட்சுமி நடித்த ‘சிறை,’ தாலிதானம், மற்றும் தவம், மனக்கணக்கு, சந்தோஷ கனவுகள், கூட்டுப்புழுக்கள், வரம், பத்தினி பெண் உள்பட 27 படங்களை இயக்கி உள்ளார். பத்தினி பெண் என்ற பட த்தில் சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கதை வசனத்திற்கு இவருக்கு 2 மாநில விருது கிடைத்தது. சர்க்கரை நோயால் பாதிகப்பட்ட இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதற்காக, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை சக்தி மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள வீ ட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த இயக்குனர் ஆர்.சி.சக்திக்கு லட்சுமி என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி. நாடக கலைஞராக வாழ்க்கையை துவங்கியவர் சினிமாவில் காலடி பதிக்க தொடங்கினார். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை போரூர் மின்சார மயானத்தில் ஆர்.சி.சக்தியின் உடல் தகனம் செயப்பட உள்ளது.
Hot this week
அரசியல்
எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
அரசியல்
விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அரசியல்
மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics
அரசியல்
எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
அரசியல்
விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அரசியல்
மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

