இலங்கை அதிபர் சிறீசேனாவை கொல்ல முயற்சி?: அதிர்ச்சித் தகவல்!

maithripala-sirisena கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது இலங்கை அதிபர் சிறீசேனாவைக் கொல்ல சதி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த சுதந்திர தினவிழாவின் போது அதிபர் சிறீசேனவை கொல்ல முயற்சி நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி இலங்கை ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அதிபர் உள்பட அமைச்சர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த அதிர்ச்சி தகவல் அரசுக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே குண்டு துளைக்காத மேலாடையை அதிபர் மைத்ரிபால சிறீசேன, விழாவின்போது அணிந்திருந்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1981ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத், அணிவகுப்பு மரியாதையில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற தாக்குதலை இலங்கை அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை, தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு துறைச் செயலாளர் பஸ்நாயக அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், யாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளது. தாக்குதலை நடத்த திட்டமிட்டது யார் என்ற தகவல்கள் தெரிவிக்கப் படவில்லை. முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில், இந்த முறை சுதந்திர தின விழாவை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் இதை சிறீசேன மாற்றினார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்சவை, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறீசேன வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் தேர்தலின் போதே ராணுவத்தைப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க ராஜபட்ச சதி செய்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து, ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக சதி உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜன.9ஆம் தேதி புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேன பொறுப்பேற்றார். இதன் பின்னர், ராஜபட்ச ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள், வெள்ளை வேன் கொலைகள் உள்ளிட்டவை குறித்து விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜபட்ச மகன்கள், அவரது தம்பிகள், குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Entertainment News

Popular Categories