December 6, 2025, 5:15 PM
29.4 C
Chennai

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம்-இபிஎஸ்..

1104005 12 - 2025

அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோரை அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். இதில் பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தரப்பில் இருந்து இதுவரை உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதே நேரம் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வுக்குள் நிலவும் இந்த குழப்பத்தால் பா.ஜனதா போட்டியிட யோசிக்கிறது. இதற்காக தொகுதியின் கள நிலவரத்தையும் சர்வே செய்து தயாராக வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக பா.ஜனதா தலைமை டெல்லி தலைமைக்கு தெரிவித்துள்ளது. டெல்லி மேலிடத்தில் இருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதை பொறுத்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது. தேனியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “என் வழி தனி வழி” என்று குறிப்பிட்டு சின்னத்தை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று முதல் விருப்ப மனு பெறப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமை கழகத்தில் இன்று முதல் 26-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “நாங்கள் கூட்டணி தர்மத்துடன் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் ஆதரவு கேட்டோம். பா.ஜனதா தேசிய கட்சி என்பதால் டெல்லியில் கேட்டு சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் போட்டியிடுவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி கட்சியின் முடிவை கேட்பதற்காக காத்திருப்பதில் தவறு இல்லை. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories