ஓசியாக பறித்து சாப்பிட்ட கொடுக்காப்புளி கிலோ ரூ.200

IMG 20230210 WA0028 - 2026
திண்டுக்கல் மாநகராட்சி அருகே விற்பனையான கொடுக்காப்புளி காய்கள்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் கடந்த காலங்களில் கொடுக்காப்புளி மரங்கள் அதிக அளவு காய்த்து குலுங்கும். இவை பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் திண்பண்டமாக இருந்து வந்தது.

இதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் மரத்தில் பறித்து சாப்பிட்டுக் கொள்வார்கள். துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய இந்த காய் மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது என தெரியாமல் வேண்டிய அளவு சாப்பிட்டு வருவார்கள்.

ஆனால் கால மாற்றத்தின் எதிரொலியாக இது போன்ற காய்களை தற்போதைய சிறுவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த மரங்களும் அரிதாகி விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த காய்கள் கிடைத்தாலும் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்கி உண்கின்றனர்.

இதனை பயன்படுத்தி வியாபாரிகள் காய்களை பறித்து வந்தும், விலைக்கு வாங்கியும் விற்பனை செய்து வருகின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொடுக்காப்புளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்த காய்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக அதன் வியாபாரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்கள் மட்டுமே இது போன்ற காய்களை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது அதனை விலை கொடுத்து வாங்கி தாங்களும் தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து வருகின்றனர். கால மாற்றத்தால் நல்ல உணவுகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கொடுக்காப்புளியும் காட்சிப் பொருளாக மாறி விடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories