ஓசியாக பறித்து சாப்பிட்ட கொடுக்காப்புளி கிலோ ரூ.200

IMG 20230210 WA0028 - 2026
திண்டுக்கல் மாநகராட்சி அருகே விற்பனையான கொடுக்காப்புளி காய்கள்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் கடந்த காலங்களில் கொடுக்காப்புளி மரங்கள் அதிக அளவு காய்த்து குலுங்கும். இவை பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் திண்பண்டமாக இருந்து வந்தது.

இதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் மரத்தில் பறித்து சாப்பிட்டுக் கொள்வார்கள். துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய இந்த காய் மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது என தெரியாமல் வேண்டிய அளவு சாப்பிட்டு வருவார்கள்.

ஆனால் கால மாற்றத்தின் எதிரொலியாக இது போன்ற காய்களை தற்போதைய சிறுவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த மரங்களும் அரிதாகி விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த காய்கள் கிடைத்தாலும் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்கி உண்கின்றனர்.

இதனை பயன்படுத்தி வியாபாரிகள் காய்களை பறித்து வந்தும், விலைக்கு வாங்கியும் விற்பனை செய்து வருகின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொடுக்காப்புளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்த காய்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக அதன் வியாபாரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்கள் மட்டுமே இது போன்ற காய்களை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது அதனை விலை கொடுத்து வாங்கி தாங்களும் தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து வருகின்றனர். கால மாற்றத்தால் நல்ல உணவுகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கொடுக்காப்புளியும் காட்சிப் பொருளாக மாறி விடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories