ராணுவ வீரர் கொலை: திமுக கவுன்சிலர், போலீஸ் உள்பட 9 பேர் கைது!

images 2023 02 16T144719.364 - 2026

கிருஷ்ணகிரி அருகே உள்ளூர் கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயம் அடைந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி திமுக கவுன்சிலர், ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரபு .பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குடிநீர் இதில் ஏன் துணி துவைக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறதுஅதற்கு பிரபாகரன் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரனின் தாய் எதோ சொல்ல, சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் அன்று மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி குணாநிதி ராஜபாண்டியன் அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது .இந்த தாக்குதலில் 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வந்தனர் .இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு இறந்தார்.

இதையடுத்து பிரபு கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றி தலைமறைவான ஒன்பது சந்தேக நபர்களையும் தேடினர்.

இதில் முதலாவதாக குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன்,வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார்.

இவர்களை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories