2023ன் இந்த 75 நாட்களில்… இந்தியா அடைந்திருக்கும் சிறப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!

modi in india today conclave - 2026

2023இல் 75 நாட்கள்.. மார்ச் 18 அன்று இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசியதில் இருந்து…

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

2023இல் 75 நாட்கள் முடிந்திருக்கின்றன.  நான் இந்த 75 நாட்கள் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.   இந்த 75 நாட்களில் தேசத்தினுடைய, வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீன் பட்ஜட் வந்தது;  இந்த 75 நாட்களில் கர்நாடகத்தின் ஷிவமொம்மாவிலே, விமானநிலையம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது;  இந்த 75 நாட்களில் மும்பையில் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டம் தொடங்கப்பட்டது; இந்த 75 நாட்களில் தேசத்திலே உலகின் மிக நீண்ட  ஆற்றுச் சுற்றுலாப் பயணம் நடந்தது;  பெங்களூரு மைசூரூ விரைவுவழிச்சாலை தொடங்கப்பட்டது;  தில்லி-மும்பை விரைவுவழிச்சாலை நீட்டிப்பு தொடங்கப்பட்டது; மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் பயணிக்கும் வந்தே பாரத் ட்ரயின்கள் ஓடத் தொடங்கின; ஐஐடி தார்வாடின் நிரந்தரமான வளாகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  பாரதம் தனது அண்டமான் நிகோபார் தீவுக்கூட்டத்தின், 21 தீவுகளுக்குப் பரம்வீர் சக்ரம் விருது பெற்றோரின் பெயரிட்டது. 

pm modi in indiatoday conclave - 2026

நண்பர்களே, இந்த 75 நாட்களிலே தான், பாரத நாடு, பெட்ரோலிலே 20 சதவீதம் எத்தனால் மதிப்புக்கூட்டலைச் செய்து, ஈ20 எரிபொருளை அறிமுகம் செய்தது.  இந்த 75 நாட்களிலே, துமகுருவிலே ஆசியாவின் மிகப்பெரிய மிக நவீனமான, ஹெலிகாப்டர் தொழிற்சாலை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஏர் இண்டியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய, விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.   இந்த 75 நாட்களில் தான், பாரத நாடு, ஈ சஞ்சீவனி வாயிலாக, பத்துக்கோடி தொலைபேசிவழி ஆலோசனை என்ற இலக்கை எட்டியிருக்கிறது.  இந்த 75 நாட்களில் தான் பாரதம், 8 கோடி புதிய குழாய்வழி குடிநீர் இணைப்புக்கள் இலக்கை எட்டியது.  இந்த 75 நாட்களிலே தான் யுபி உத்தராகண்டில் ரயில் நெட்வர்க்கின், 100 சதவீதம் மின்மயமாக்கல் பனி முழுமையடைந்தது. 

நண்பர்களே இந்த 75 நாட்களிலே, கூனோ தேசியப்பூங்காவிலே 12 புதிய வேங்கைகள் வந்து சேர்ந்தன.  பாரதநாட்டுப் பெண்கள் அணி அண்டர் 19 போட்டியில் டி20 உலகக்கோப்பையை வென்றது.  இந்த 75 ஆண்டுகளிலே தேசம் 2 ஆஸ்கர்கள் வென்றதை சந்தோசமாகக் கொண்டாடியது. 

நண்பர்களே இந்த 75 நாட்களிலே ஆயிரக்கணக்கான அயல்நாட்டுத் தூதர்களும், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜி 20 கூட்டங்களில்   பங்கெடுக்க, பாரதம் வந்தார்கள்.  இந்த 75 நாட்களிலே, ஜி20யின் 28 முக்கியமான கூட்டங்கள் நடந்திருக்கின்றன.  அதாவது மூன்று நாட்களுக்கு ஒரு கூட்டம் என்ற வகையில்.   இந்த வேளையில் தான், எனர்ஜி சம்மிட்டும் நடந்தது.  இன்றும் கூட, உலக அளவிலான சிறுதானிய மாநாடு நடந்தது. 

நாமுமே பார்த்திருந்தோம், பெங்களூருவிலே நடந்த ஏரோ இண்டியாவிலே பங்கெடுத்துக் கொள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பாரதம் வந்தன.  இந்த 75 நாட்களிலே தான், சிங்கப்பூரோடு சேர்ந்து யுபிஐ இணைப்புத் தொடங்கப்பட்டது.  இந்த 75 நாட்களிலே தான் துருக்கிக்கு உதவும் வகையிலே பாரதம் ஆப்பரேஷன் தோஸ்தினைச் செயல்படுத்தியது. 

இப்போதிலிருந்து சில மணிநேரம் முன்னர் தான், பாரத பங்களாதேசம் எரிவாயுக் குழாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இந்த 75 நாட்களின் பட்டியல் என்பது மிக நீளமானது, முழுவதும் கூற நேரம் போதாது.  மேலும் 75 நாட்களின் சில விஷயங்களை நான் ஏன் எடுத்துக் காட்டுகிறேன் என்றால், இது தான், இந்தியாவின் நேரம் என்பதன் பிரதிபலிப்பாகும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories