December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

மகளிர் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்-மு.க.ஸ்டாலின்..

சமூக நலத்திட்டங்களிலேயே இது மாபெரும் முன்னெடுப்பு, உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனிதநேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது எனவும் முதல்வர் கூறினார். குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உரிமை தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Copy of 1 Frame 46 1 16784270393x2 1 - 2025

மகளிர் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இந்த திட்டம் நூற்றாண்டின் மகத்தான திட்டம். குடும்பத்தலைவிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்கும் என கேள்வியெழுந்துள்ளது. ஏற்கனவே ஆதிக்க வர்க்கத்தால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டனர். ஆனால் இன்று பள்ளி கல்விகளில் அதிக மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவதெல்லாம் பெருமையாக உள்ளது.

வீட்டிலும் வெளியிலும் பல மணிநேரம் உழைத்து கொண்டிருக்க கூடிய பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சமுதாயத்தில் இதன் பலன் என்பது அதிகாமாக இருக்கும். இதற்காக ரூ.7ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகைக்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்படும், தமிழகத்தில் ஒருகோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும். மீனவப்பெண்கள், சிறுகுறு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கட்டுமான தொழில் ஈடுபடும் பெண்கள், நடைபாதை கடை நடத்தும் பெண்கள், சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து பெங்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனித நேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது எனமுதல்வர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories