ரசிகர்களுடன் நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு

Published:

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 35-வது திருமண நாளை ஒட்டி போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். இவரது. இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 35-வது திருமண நாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக போயஸ் கார்டன் வீட்டின் முன்னர் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்ட ரஜினி காந்த் திடீரென வெளியே வந்து ரசிகர்களிடம் கை குலுக்கி அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். பட்டு வேஷ்டி – பட்டு சட்டை அணிந்து வந்த அவரைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தனது பிறந்தநாளன்று வெளியான லிங்கா படம் நஷ்டமடைந்ததில், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில், பொது இடங்களுக்கு வருவதை ரஜினிகாந்த் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், அவர் ரசிகர்களை சந்தித்தது சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img