கேரளா-பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு மிரட்டல் கடிதம் கேரளாவில் உஷார்

1500x900 1235319 modione33 3 - 2026
#image_title

பிரதமர் மோடியின் கேரள வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்க வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கொச்சி செல்லவிருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் மோடியின் கொச்சி வருகையின்போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என்று, அம்மாநில பாஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், அனுப்பியவர் பெயர், முகவரி அனைத்து விவரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

கடித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில்அந்த நபர், தான் எந்தக் கடிதமும் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய எதிரிகள் தன்னை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் தனது பெயரைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.

இதற்கிடையில், பாதுகாப்பு ஒத்திகைகளை குறிக்கும் ஏடிஜிபியின் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில், தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்புகளால் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏடிஜிபின் கடிதம் ஊடகங்களில் கசிந்தது குறித்து கவலை தெரிவித்துள்ள கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், இது மாநில காவல்துறையில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கவும், பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் இருக்கும் பிரதமரின் கேரள வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தரன், “பிரதமரின் கேரள வருகை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உத்வேகம் அளிக்கும். மக்களிடம் பிரதமரின் வருகை குறித்த பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமர் மோடி சாலையோர நிகழ்வுகளை நடத்துவார்.

மக்கள் தாமாக முன்வந்து அவரை வரவேற்பர். யுவம் மாநாடு கேரளாவில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளாவின் வளர்ச்சியை வரும் இளைஞர்கள் அனைத்து இளைஞர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories