தமிழக கவர்னர் ரவி இன்று திடீர் டெல்லி பயணம்-பரபரப்பு..

500x300 1872089 tngovernor - 2026
#image_title

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட 17 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் தி.மு.க. தலைவர்கள் மீது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். கவர்னர் ரவி இன்று திடீர் டெல்லி பயணமாக ஜனாதிபதியை சந்தித்து பேசுகிறார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதலில் அவரது பயணம் தனிப்பட்ட விஷயங்களுக்கானது என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி சென்றுள்ள கவர்னர் அங்கு யார்-யாரை சந்தித்து பேசுவார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. கவர்னர் மாளிகை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் கவர்னர் டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவில்தான் அவர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்த 3 நாட்களும் அவரது டெல்லி பயண விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

டெல்லியில் அவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். சட்ட அமைச்சகம் உள்பட சில மத்திய அமைச்சக உயர் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. கவர்னர்கள் தங்கள் ஒப்புதலுக்கு வந்துள்ள மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட 17 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

அந்த மசோதாக்களுக்கு அவர் எப்போது ஒப்புதல் வழங்குவார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நிறைவு பெற்ற சட்ட கூட்டத்தொடரில் 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அந்த வகையில் கவர்னரின் ஒப்புதலை பெற 30-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே இது தொடர்பாக கவர்னர் டெல்லியில் மூத்த அதிகாரிகளிடம் விவாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப கவர்னர் ரவி முடிவுகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் தி.மு.க. தலைவர்கள் மீது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.

இது தொடர்பான ஆவணங்களை பா.ஜ.க.வினர் கவர்னரிடம் கொடுத்துள்ளனர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோக்களை 2 தடவை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த 2 ஆடியோக்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இது தொடர்பாகவும் டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் கவர்னர் ரவி ஆலோசிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கவர்னரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories