சென்னை அருகே மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை..

1500x900 1873207 19 - 2026
#image_title

ராணிப்பேட்டை அருகே தொழிலாளியின் மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர். ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் இச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேலபுலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). சென்னையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபி என்கிற ரேணுகா (30) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதியின் மகள் ஸ்ருதிஹா (5), மகன் தீபக் (3) இருவரும் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தனர்.

ரேணுகா தனது 2 குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ரேணுகா அங்கன்வாடியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உடனே அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ரேணுகா அவரது குழந்தைகளுடன் மதிய உணவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என தெரிவித்தனர். இந்நிலையில் மேலபுலம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் ரேணுகா மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக மிதந்தனர். அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர்.

3 பேர் உடல்களை ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக ரேணுகா 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சங்கர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அவர் மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories