December 6, 2025, 11:08 AM
26.8 C
Chennai

பொற்கோவில் அருகே இன்றும் குண்டுவெடிப்பு – 5 பேர் கைது..

images 77 - 2025
#image_title

பஞ்சாபில் உள்ள பொற்கோயில் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டு ஒன்று வெடித்தது. கடந்த 5 நாட்களில் அந்த பகுதியில் நடந்த 3வது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமிர்தசரஸில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் அமைதியை போலீசார் ஏற்படுத்துவர்” என்று தெரிவித்துள்ளார்.

முதல் குண்டுவெடிப்பு மே 6ம் தேதி நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு வெடிப்பு கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்தது. இவை அனைத்தும் பொற்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையும், பஞ்சாப் போலீஸாரும் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளியான முதல் தகவல்களின் படி, இந்த குண்டு வெடிப்புகளுக்கு தொலைவில் இருந்து தூண்டும் விசைப்பொறிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அமிர்தசரஸ் ஹெரிட்டேஜ் வீதியில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் வெடிபொருள்கள் குளிர்பான கேனில் வைத்து வீசப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். இந்த குண்டுவெடிப்புகளில் டெட்டனேட்டர் ஏதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குழப்பத்தை விளைவிக்கும் வகையிலேயே இந்த குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories