ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..

images 2023 05 17T122454082 - 2026
#image_title

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக சட்டவிதிகளை அங்கீகரித்து இணையத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த 3 மாத காலத்திற்குள்ளாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதோடு பல்வேறு சட்ட விதிகளும் திருத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட விரும்புவோர் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமை கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். கட்சி கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை முன்மொழிய வேண்டும்.

அதேபோல கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை வழிமொழிய வேண்டும் என்று பல்வேறு சட்டதிருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு 1 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் விதிகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. திருத்தப்பட்ட அதிமுக சட்ட விதிகளுக்கு அங்கீகாரம் அளித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories