திமுக இரண்டரை ஆண்டு ஆட்சி தமிழகத்திற்கு ஏழரை -குஷ்பு..

images 2023 05 22T102257213 - 2026
#image_title

உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. திமுக.வின் இரண்டரை ஆண்டு ஆட்சி தமிழகத்திற்கு ஏழரை என்ற கதையாகத்தான் உள்ளது என குஷ்பு விமர்சனம் செய்து கூறியுள்ளார்.

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் தி.மு.க. ஆட்சியில் சாதனை என்பதை விட மக்களுக்கு வேதனை தான் அதிகம். தாராளமாக புழங்கும் சாராயம் எங்கும் கொலைகள், கொள்ளைகள். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பார்களில் மது விற்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதை போலீசார் கண்டு கொள்வது கூட இல்லை.

பா.ஜ.க.வை விமர்சிக்க தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. விரைவில் நாலாவது இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. அவர் ஒரு தர்மயோகி என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டி வருகிறார்.

அதனால் தான் வெளிநாட்டு பிரதமர் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெரும் அளவுக்கு எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காரணத்திற்காக இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்பது காங்கிரஸ் காணும் ஆட்சிக்கனவு. கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது. மன்னர் உடையை அணிந்து நானும் மன்னர் தான் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் மன்னர் ஆக வேண்டுமே. தனது சொந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளவே முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை பிடிக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க.வின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி தமிழர்களுக்கு ஏழரை என்ற கதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories