ராஜபாளையம்-இரு  குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..

994578 - 2026
குழந்தையை மீட்கும் பணியில்

ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இரு மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக் குமார் (36). இவரது மனைவி ராமுத் தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), வர்ஷா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முத்துக் குமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். முத்துக் குமார் குடித்து விட்டு அடிக்கடி ராமுத்தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் குடும்பப் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமுத்தாய் தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு நீண்ட நேரமாகியும் ராமத் தாய் குழந்தைகளுடன் வீட்டிற்கு வராததால் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தெற்கு தேவதானம் பகுதியில் உள்ள முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இரு உடல்கள் மிதப்பதை கண்ட விவசாயிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராமுத்தாய், வர்ஷா ஆகியோரின் உடல்களை மீட்டு வேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமி நிஷாவின் உடல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரு மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி குழந்தையின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவதானம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories