கோயில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தொடர்பில் இந்து முன்னணி கோரிக்கை!

kadeswara subramaniam hindu munnani - 2026

கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

கோவில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் முதலாளித்துவ பாசிச மனநிலை பிரதிபலிக்கிறது.

வருமானம் குறைவாக உள்ள கோவில்களில் கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் கூட கொடுக்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.

சட்டப்படி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்பது தொழிலாளர் நல சட்டம் இதனை செயல்படுத்த மறுக்கும் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அது தனியார் ஆனாலும் அரசின் கீழ் உள்ளதானாலும்.

இதுவே வருமானம் இல்லாத கோவில்களில் நியமிக்கப்படும் செயல் அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவது இல்லையா?

மேலும் கோவில் நிலங்களுக்கான குத்தகை வீடு கடைகளுக்கான வாடகை முதலியவற்றை முறையாக வசூலிக்காமல் அதிகாரிகளாக உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?

அதிக வருமானம் உள்ள கோவில்களின் வருமானம் ஆடம்பரத்திற்கும் அரசியல் செய்வதற்கும் வீணடிக்கப்படுகிறது. எங்கோ இருக்கும் அதிகாரியின் காருக்கு பெட்ரோல் கோவில் நிதியிலிருந்து செலவழிக்க படுகிறது. இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.

எப்படி ஒருகால பூஜைகூட நடக்காத கோவிலுக்கு நிதி ஒதுக்கி முறையாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமோ, அதுபோல கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் போதிய வருமானம் தகுதி திறமை அனுபவம் முதலானவை கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். அதிலும் அரசின் தொழிலாளர் நல சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் தற்காலிக ஊழியர்களுக்கு கூட வழங்கப்பட வேண்டும்.

கோவில் நிதியில் சுயநலமாக, சொகுசாக வாழும் அரசியல்வாதிகளுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் கோவில் பணியை புண்ணிய காரியமாக செய்து வரும் திருப்பணி தொண்டர்கள் வயிற்றுப் பசி புரியுமா?..

எனவே நீதிமன்றம் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories