December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

தொலைந்து போன லட்சக் கணக்கான பெண்கள், சிறுமிகள்: பயங்கரவாதிகள் பின்னணி குறித்து இந்து முன்னணி ஐயம்!

hindumunnani - 2025

நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பெண்கள், சிறுமிகள் தொலைந்து போன செய்தி அதிர்ச்சி அளிக்கிறது, இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சதித் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் நாடுமுழுவதும் கடந்த 3ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் தொலைந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இது சாதாரண விஷயமாக தெரியவில்லை. திட்டமிட்டு நடக்கின்ற சதியாக கூட இருக்கலாம். தமிழகத்தில் சுமார் 57 ஆயிரம் பேர் காணவில்லை.

தமிழகத்தில் காவல்துறை ஆணையர் இதற்காக தொலைந்து போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்க ஆபரேஷன் ஒன்றை அறிவித்து, பல குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தி தொலைத்தவர்கள் பற்றி முழு தகவலும் வெளியிடப்பட வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், காவல்துறை இணைந்து இந்த ஆபத்தை தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் பணியை தீவிரப் படுத்தவும் வேண்டும். இதன் பின்புலத்தில் மதவாத பயங்கரவாத சக்திகள் இருக்கலாம். கடத்தப்படும் பெண்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் சில ஆண்டுகளாக சிறுமிகள் சீரழித்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை தான் தீர்வு என மக்கள் நினைக்கின்றனர். உடனடியாக இத்தகைய கயவர்களை என்கவுண்டர் செய்வதைக் கூட மக்கள் வரவேற்கிறார்கள்.

நீதித்துறையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பெண்கள், சிறுமிகள் மீது வன்முறையை நடத்துவோர் மீது சட்டத்தின் அடிப்படையை தாண்டி தார்மிக கடமையில் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய ஈவிரக்கமற்ற மனிதர்களுக்கு ஜாமீன் பெற்று வெளியே வந்து பழிவாங்கும் போக்கால் பொது மக்கள் இந்த கயவர்களின் அராஜகத்தை கண்டும் காணாமல் போகிறார்கள் என்பதை வேதனையுடன் சுட்டி காட்டுகிறோம். பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்க பொது மக்கள் முன்வராததற்கு இத்தகைய பயம் காரணமாக உள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளின் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்துவது மேலும் நல்ல பலனைத்தரும்.

பெண்கள் சிறுமிகள் தொலைந்து போவது தனிப்பட்ட காரணங்களுக்காக என கொள்ளாமல் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories