December 5, 2025, 11:47 AM
26.3 C
Chennai

சிறுவன் கழுவிய அறுவை சிகிச்சைக் கருவிகள்; வீடியோ வெளியிட்ட நிருபர் கைது!

Dhinasari Home page

உண்மையை சொல்லும் தைரியம் யாருக்கும் வரக் கூடாது! அடக்குமுறையால் பத்திரிக்கையாளர் கைது! – என்று, அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் சிறுவனால் கழுவப்பட்ட வீடியோ வைரலான விவகாரத்தில், இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது தந்தை காலில் உள்ள விரலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதித்திருந்த நிலையில், அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்களான கத்திரிக்கோல் போன்றவற்றை அவரது மகனிடம் (சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுவனிடம்) கொடுத்து கழிவறை அருகே உள்ள கை கழுவும் கோப்பையில் கழுவி வர சொல்லி உள்ளனர்.

(பொதுவாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கத்தி கத்திரிக்கோல் போன்ற அனைத்து பொருட்களையும் கொதி நீரில் நன்றாக சுத்தம் செய்த பின்பு(Sterilize) பயன்படுத்துவது தான் மருத்துவமனையின் வழக்கம்).

அந்த சிறுவன் கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு கழிவறை அருகே உள்ள இடத்தில் அதனை கழுவும் போது அந்த மருத்துவமனைக்கு தனது உறவினரை பார்ப்பதற்கு எதிர்ச்சையாக வந்திருந்த செய்தியாளர் இன்பராஜ் என்பவர் இந்த அவலத்தை கண்டு உடனடியாக தனது செல்போனில் படம் பிடித்து, செய்தியாளர் குழுவில் பதிவிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் விரைவாக பரவியது.

இந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவமனை முதல்வர் சிவகுமார் தவறு நடந்துள்ளது என்பதாக ஒத்துக் கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று மாலை 5:30 மணி அளவில் அதே முதல்வர் அந்த நோயாளியிடம் வற்புறுத்தி ஒரு புகார் கம்ப்ளைன்ட் தயார் செய்து தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்து செய்தியாளர் இன்பராஜ் மீது வழக்கு பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதன் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் செய்தியாளர் இன்பராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் ஸ்டேஷன் ஜாமீனில் விடிவித்துள்ளனர்.

வீடியோவின் உண்மைத்தன்மையை விசாரித்து கண்டறியாமல் நடந்த தவறை மூடி மறைக்கும் வண்ணம் அதனை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்து முன்னணி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு உண்மை சம்பவங்களை இது போல் வெளிக்கொண்டுவரும் நபர்களின் மீது அடக்கு முறையை பயன்படுத்தும் தமிழக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories