December 5, 2025, 9:56 AM
26.3 C
Chennai

பழைய ரயில்களை மீண்டும் இயக்குக: தென்னக ரயில்வேக்கு பயணிகள் வலியுறுத்தல்!

thenmalai train track - 2025
#image_title

மதுரை விருதுநகர் செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நிலையில் இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை கொல்லம் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கல் முடிந்து மின்சார எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் மிகப்பெரிய நகரங்களாக செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சங்கரன் கோவில் கடையநல்லூர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மையமான குற்றாலமும் தென்காசி அருகில் உள்ளது .

இதனால் இந்த வழித்தடத்தில் ரயிலில் பயணிப் போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

மேலும் சபரிமலை சீசன் காலத்தில் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பக்தர்கள் சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் மற்றும் பொதிகை ரயில் மூலம் செங்கோட்டை , அல்லது புனலூர் வந்து சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் இந்த ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.

ஆனால் பயணிகளின் நலன் கருதி போதிய ரயில்களில் இயக்க தென்னக ரயில்வே முன் வருவதில்லை.மீட்டர் கேஜ் பாதையில் இந்த வழித்தடத்தில் கொல்லம் செங்கோட்டை விருதுநகர் மதுரை கோயமுத்தூர் இடையே இயங்கிய ரயில் தற்போது இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வந்தும் இதுவரை இயக்குவதற்கான சூழல் இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி போத்தனூர் ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழித்தடத்தில் கொல்லத்திற்கு மீண்டும் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.

மேலும் மதுரை செங்கோட்டை வழிதடத்தில் 16 முதல் 18 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயில் தற்போது மயிலாடுதுறை செங்கோட்டை இடையே 11 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயங்குகிறது. மற்றொரு ரயில் மதுரை செங்கோட்டை குருவாயூர் உடைய 14 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் சாதாரண பயணிகளின் நலன் கருதி மதுரை செங்கோட்டை இடையே மின்சார ரயில் இயக்கவும் திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தற்போது இயக்கப்படும் வாரம் ஒருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும், ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து தென்காசி விருதுநகர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாரம் ஒரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் இராமேஸ்வரத்தில் இருந்து விருதுநகர் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கவும் ரயில்வே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் .

வரும் பிப்ரவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்களை துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories