பழைய ரயில்களை மீண்டும் இயக்குக: தென்னக ரயில்வேக்கு பயணிகள் வலியுறுத்தல்!

thenmalai train track - 2026
#image_title

மதுரை விருதுநகர் செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நிலையில் இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை கொல்லம் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கல் முடிந்து மின்சார எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் மிகப்பெரிய நகரங்களாக செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சங்கரன் கோவில் கடையநல்லூர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மையமான குற்றாலமும் தென்காசி அருகில் உள்ளது .

இதனால் இந்த வழித்தடத்தில் ரயிலில் பயணிப் போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

மேலும் சபரிமலை சீசன் காலத்தில் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பக்தர்கள் சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் மற்றும் பொதிகை ரயில் மூலம் செங்கோட்டை , அல்லது புனலூர் வந்து சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் இந்த ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

ஆனால் பயணிகளின் நலன் கருதி போதிய ரயில்களில் இயக்க தென்னக ரயில்வே முன் வருவதில்லை.மீட்டர் கேஜ் பாதையில் இந்த வழித்தடத்தில் கொல்லம் செங்கோட்டை விருதுநகர் மதுரை கோயமுத்தூர் இடையே இயங்கிய ரயில் தற்போது இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வந்தும் இதுவரை இயக்குவதற்கான சூழல் இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி போத்தனூர் ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழித்தடத்தில் கொல்லத்திற்கு மீண்டும் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.

மேலும் மதுரை செங்கோட்டை வழிதடத்தில் 16 முதல் 18 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயில் தற்போது மயிலாடுதுறை செங்கோட்டை இடையே 11 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயங்குகிறது. மற்றொரு ரயில் மதுரை செங்கோட்டை குருவாயூர் உடைய 14 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

இதனால் சாதாரண பயணிகளின் நலன் கருதி மதுரை செங்கோட்டை இடையே மின்சார ரயில் இயக்கவும் திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தற்போது இயக்கப்படும் வாரம் ஒருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும், ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து தென்காசி விருதுநகர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாரம் ஒரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் இராமேஸ்வரத்தில் இருந்து விருதுநகர் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கவும் ரயில்வே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் .

வரும் பிப்ரவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்களை துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories