February 23, 2026, 1:05 AM
26.7 C
Chennai

குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை என்று, தமிழக பாஜக., துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் CAA கால் வைக்க விட மாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திருப்பதி நாராயணன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இதுகுறித்துத் தெரிவித்ததாவது…

இது போன்று சொல்வதே சட்ட விரோதம். தமிழகத்தில் யாரும் இந்த சட்டதிருத்தத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். அப்படியே யாராவது விண்ணப்பித்தாலும் மத்திய அரசாங்கத்தை தான் அணுக வேண்டுமேயன்றி மாநில அரசுக்கு இதில் எந்த பணியும், தொடர்பும் இல்லை.

அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள் அல்லது கிறிஸ்துவர்கள் டிசம்பர் 2014க்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்து, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதே சட்டத் திருத்தம்.

ஆகவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பங்கும் நிலையில், இதை அறிக்கை வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகிறது. இந்த சட்டமானது இந்திய குடிமக்களுக்கானதே இல்லை என்பதை முதல்வர் அறிவாரா? இதை விமர்சிக்கலாம் அல்லது எதிர்க்கலாம், ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றோ CAA கால் அல்லது கை பதிக்க விட மாட்டோம் என்று சொல்வது வெறும் வெற்று பேச்சே. குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories