December 5, 2025, 11:45 PM
26.6 C
Chennai

‘ஒக்கி’யைப் போல் மீண்டும் உருவாகிறது புயல்; குமரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

imd image rain - 2025

சென்னை:

கடந்த 2017 நவ.30ல் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது திடீரென ‘ஒக்கி’ புயலாக மாறி, யாரும் எதிர்பாராத வகையில் கன்னியாகுமரியை கடுமையாகத் தாக்கியது. அப்போது, சரியான புயல் எச்சரிக்கை விடுக்கப் படவில்லை என்றும், அதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது குமரி கடற்பகுதியில் அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதால், கடற்படை, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாக வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விடுத்த, புயல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பில், இந்திய பெருங்கடலில் இலங்கையின் தென்பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது நாளை காலை வடமேற்கு திசையில் நகரும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே குமரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ., வேகத்திலும், சில நேரம் 60 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளாவின் கடற்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories