குமரி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. குறிப்பாக காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் அபாயம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியது.

இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று வரை கடலோர கிராமங்களில் வானிலை ஆய்வு மைய அறிக்கைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்வதாக தெரிவித்தனர்.இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் தென் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின்போது கடலில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். அலைகள் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பும். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குமரி கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மாவட்டத்தின் உட்புற பகுதிகளிலும் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசியது. அதோடு சாரல் மழையும் பெய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories