தை பொங்கல் -மெமு சிறப்பு ரயில் இயக்க பொது மக்கள் கோரிக்கை..

1001171078 - 2026


தைத்திருநாளையொட்டி முன் பதிவில்லாத பகல் நேர மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த நவ.,14 இல் தைத் திருநாளுக்கான இரயில் முன் பதிவு தொடங்கியது. பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்து முன் பதிவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, முன் பதிவற்ற பகல் நேர மெமு இரயில்களை இயக்கிட வேண்டுமென ஏராளமானோர் இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது பணி நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், பொங்கல் திருநாளை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்களை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.


கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை மற்றும் தைத்திருநாளையொட்டி சென்னை-மதுரை, சென்னை-திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பகல் நேர சிறப்பு மெமு ரயில்களை இரயில்வே நிர்வாகம் இயக்கியது.
ஆகவே, சென்னை -செங்கோட்டை சென்னை-தூத்துக்குடி, சென்னை-கோவை, கோவை-தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இரயில்வே நிர்வாகமானது, ஜனவரி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்களை இயக்குவதற்கான முன் அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென பயணிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories