T20 WC 2026: இன்று இலங்கை காட்டிய ஆக்ரோஷம்

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள் 16.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயும் இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் இலங்கையில், பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


பூவாதலையா வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஆலிஷான் ஷரஃபு (40 ரன்), சோயிப் கான் (68 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

பிற மட்டையாளர்கள் ஜொலிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டு இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சர்தான் (53 ரன்), டார்விஷ் ரசோதி (33 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆட்டமிழக்காமல் 40 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றாது. இது ஆஃப்காணிஸ்தான் அணியின் முதல் வேற்றி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அந்த அணி சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி (6 புள்ளிகள்) சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!


இங்கிலாந்து அணி தடுமாறி வென்றது

கொல்கொத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வில் ஜேக்ஸ் (53 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார்.

பிற மட்டையாளர்களான பில் சால்ட் (28 ரன்), பெதேல் (23 ரன்), டாம் பேண்டன் (30 ரன்), சாம் கரன் (25 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடவந்த இத்தாலி அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா (43 ரன்) நல்ல தொடக்கம் தந்தார். பென் மனேண்டி (60 ரன்), கிராண்ட் ஸ்டுவர்ட் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

எனினும் ஜாமி ஓவர்டன் (3 விக்கட்) மற்றும் சாம் கரன் (3 விக்கட்) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

போட்டியின் இரண்டாவது அப்செட் –

இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது


பூவாதலையா வென்ற இலங்கை அணிமுதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (27 பந்துகளில் 54 ரன்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 56 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தபினர் காமரூன் கிரீன் (3 ரன்) மற்றும் டிம் டேவிட் (6 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டனர்.

அதன் பின்னர் ஜோஷ் இங்கிலிஷ் (27 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (22 ரன்) இருவரும் நன்றாக ஆடினர். ஆனால் பிற மட்டையளர்கள் சரியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 181 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிசாங்கா (52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்) சதமடித்தார். அவருக்குத் துணையாக குசால் மெண்டிஸ் (38 பந்துகளில் 51 ரன்) மற்றும் பவன் ரத்னநாயகே (15 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 184 ரன் அடித்து வெற்றி பெற்றது. பதுன் நிசாங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!


இந்த வெற்றி மூலம் இலங்கை சூப்பர் 8க்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த குரூப்பில் சூப்பர் 8 க்குச் செல்லும் மற்றொரு அணி ஜிம்பாபேயா ஆஸ்திரேலியாவா என்பதை வரப்போகின்ற ஆட்டங்கள் சொல்லும்.


நாளை (17.02.2026) முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறும்.

மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான் கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories