T20 WC 2026: இன்று இலங்கை காட்டிய ஆக்ரோஷம்

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள் 16.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயும் இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் இலங்கையில், பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


பூவாதலையா வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஆலிஷான் ஷரஃபு (40 ரன்), சோயிப் கான் (68 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

பிற மட்டையாளர்கள் ஜொலிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டு இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சர்தான் (53 ரன்), டார்விஷ் ரசோதி (33 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆட்டமிழக்காமல் 40 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றாது. இது ஆஃப்காணிஸ்தான் அணியின் முதல் வேற்றி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அந்த அணி சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி (6 புள்ளிகள்) சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது.


இங்கிலாந்து அணி தடுமாறி வென்றது

கொல்கொத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வில் ஜேக்ஸ் (53 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார்.

பிற மட்டையாளர்களான பில் சால்ட் (28 ரன்), பெதேல் (23 ரன்), டாம் பேண்டன் (30 ரன்), சாம் கரன் (25 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடவந்த இத்தாலி அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா (43 ரன்) நல்ல தொடக்கம் தந்தார். பென் மனேண்டி (60 ரன்), கிராண்ட் ஸ்டுவர்ட் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

எனினும் ஜாமி ஓவர்டன் (3 விக்கட்) மற்றும் சாம் கரன் (3 விக்கட்) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் இரண்டாவது அப்செட் –

இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது


பூவாதலையா வென்ற இலங்கை அணிமுதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (27 பந்துகளில் 54 ரன்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 56 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தபினர் காமரூன் கிரீன் (3 ரன்) மற்றும் டிம் டேவிட் (6 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டனர்.

அதன் பின்னர் ஜோஷ் இங்கிலிஷ் (27 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (22 ரன்) இருவரும் நன்றாக ஆடினர். ஆனால் பிற மட்டையளர்கள் சரியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 181 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிசாங்கா (52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்) சதமடித்தார். அவருக்குத் துணையாக குசால் மெண்டிஸ் (38 பந்துகளில் 51 ரன்) மற்றும் பவன் ரத்னநாயகே (15 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 184 ரன் அடித்து வெற்றி பெற்றது. பதுன் நிசாங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.


இந்த வெற்றி மூலம் இலங்கை சூப்பர் 8க்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த குரூப்பில் சூப்பர் 8 க்குச் செல்லும் மற்றொரு அணி ஜிம்பாபேயா ஆஸ்திரேலியாவா என்பதை வரப்போகின்ற ஆட்டங்கள் சொல்லும்.


நாளை (17.02.2026) முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறும்.

மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான் கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories