தமிழகத்தில் நடப்பது… ​அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? சீமான் பரபரப்பு ​ பேட்டி!

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது  பாஜக ஆட்சியா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கேள்வி எழுப்பினார்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தது.

இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டை வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தலைமையில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். வி.எச்.பி. ரத யாத்திரையை முற்றுகையிட முயன்ற சீமானை போலீசார் கைது செய்தனர். சீமானுடன் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
ராம ராஜ்யம் என்ற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை ​நடுத்துவதற்கான திட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டாள் பிரச்சினையிலிருந்து பெரியார் சிலையை அகற்றுவது வரை திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கும் செயலாக தெரிகிறது. கடவுளின் பெயரால் கலவரத்தை தூண்ட முயிற்சிக்கறது. ராம ராஜ்யம் அமைத்தால் நாங்களும் எங்கள் பாட்டன் , முப்பாட்டன் அதை விட சிறந்த சோழ ராஜ்யம் அமைத்தனர். இதனால் இது அவசியமற்றது.
இங்கு பல மதங்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழும் தமிழ்நாட்டில் இந்த ரத யாத்திரை தேவையற்றது. தீந்தமிழ்நாட்டில் தீய சக்திக்கு என்ன வேலை. இந்த அரசு ரத  யாத்திரைக்கு எதிராக தடை போடாமல் போராடும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தடை போடுகிறது.  தடை என்றால் எல்லோருக்கும் தடை தானே . இங்கு நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜகவின் ஆட்சியா?
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக அரசியல் நோக்கத்திறகாக  தவிர வேறு ஒன்றுமில்லை. இதனால் தான் இந்த ரத யாத்திரை தடுக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம் என்றார்.
​ ​
2 Attachments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories