என் படத்தை பயன்படுத்தக் கூடாது: கேஜ்ரிவாலுக்கு கிரண்பேடி நோட்டீஸ்

Published:

புதுதில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தில்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஆட்டோ ரிக்சாக்களில் கேஜ்ரிவால் நேர்மையானவர், பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி சந்தர்ப்பவாதி என இருவரது படத்தை போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிரண் பேடி, எனது படத்தை  பயன்படுத்தக்கூடாது என க் கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், உடனடியாக தனது புகைப்படத்தை அகற்ற வேண்டும் என கூறியுள்ளதாகவும் பாஜக கூறியுள்ளது.

Related articles

Recent articles

spot_img