கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் லீக் போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கூறியுள்ளார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் டி20 கார்பரேட் டிராபி குறித்த எக்ஸலன்ஸ் இன் கிரிக்கெட் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

