பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதல்: 2 பேர் பலத்த காயம்
பாவூர்சத்திரம் அருகே நேற்றிரவு ஆட்டோ மீது டிராக்டர் மோதியல் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் வீ.ஜெயராஜ்(47). ஆட்டோ ஓட்டுனரான இவர் புதன்கிழமை இரவு சிவகாமிபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
திருநெல்வேலி – தென்காசி சாலையில் கீழப்பாவூர் விலக்கு அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்ய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் மற்றும் அவரோடு வந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு போக்குவரத்து நெரிசலை காவல் துறையோடு இணைந்து எம்.பி.பிரபாகரன் மற்றும் குழுவினர் இணைத்து ஒழுங்குபடுத்தினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதும் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தும் எம்.பி என்பதும் சற்று நேரம் கழித்துதான் பொதுமக்களுக்கு தெரியவந்தது
விபத்துக்கான முக்கிய காரணம் ஆட்டோவின் வேகம் ,மற்றொன்று டிராக்டரில் இண்டிகேட்டர் வசதி இல்லாதது இதை சரி செய்ய வேண்டும் மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல் துறையினர் மிதமான வேகத்தில் செல்லவும் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதையும் கண்காணிக்க வேண்டும்
விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply