முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

Published:

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி மூலம் வருவாயை பெருக்கி ஆட்சி நடத்துகிறார். தமிழக வருவாயில், 37 சதவீதம், மதுவால் கிடைக்கிறது. இதனால், நான்கு வயது குழந்தையும் குடிக்க வைக்கப்படுகிறது.எந்த அம்மாவும், தன் குழந்தைகள் மது குடிக்கக்கூடாது என்று தான் விரும்புவார்.

மதுக் குடிப்பதால், 200 வகையான நோய் நம்மை தாக்குகிறது என்பதை, மருத்துவர் என்ற முறையில் நானும், ராமதாசும் அறிவோம்.அடுத்த ஆண்டுக்கு பின், தமிழகத்தில் மது, சாராயம்
இருக்கக்கூடாது. அதற்கு, பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும் என அன்புமணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :பா.ஜ., கூட்டணியில் இல்லை: காவிரி நீர் பிரச்னைக்காக, பிரதமருக்கு கடிதம் எழுதுவதாலோ; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ பலனில்லை. எம்.பி.,- – எம்.எல்.ஏ.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சுற்றி அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்; அல்லது லோக்சபாவை முற்றுகையிட வேண்டும். அரசியலுக்காக, காவிரி பிரச்னையில், மத்திய அரசு அமைதி காக்கிறது. பா.ஜ.,
கூட்டணியில், பா.ம.க., இல்லை. அப்படி பா.ஜ.,வினர் கூறினால், அது அவர்கள் விருப்பம். இவ்வாறு என அன்புமணி தெரிவித்தார்.

 

 
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img