16 ஆயிரம் கிராமங்கள்; 2022க்குள் வளர்ச்சி இலக்கு: நிர்மலா சீதாராமன்

Published:

Nirmala Sitharaman - 2026
Central Minister Nirmala Sitharaman

விருதுநகர்: மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என்று ஆய்வு செய்ததாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களாக, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை பயனாளிகளுக்கு வழங்கிய அவர், இன்று இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் இதுபோன்று 16 ஆயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img