இன்று இந்தியா வரும் ஆப்பிள் வாட்ச் 3

13 May 10 apple watch - 2026ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் இன்று இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார் மாடல் வெளியிடப்பட இருக்கிறது. ஏர்டெல் வலைத்தளத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் சாதனத்தை மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திலும் மே 4-ம் தேதி முதல் ஆப்பிள் வாட்ச் 3 முன்பதிவு துவங்குகிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் இன்று முதல் துவங்குகிறது.

– ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சம் ஐபோன் 6 மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களுடன் மட்டுமே வேலை செய்யும். இசிம் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வாட்ச் 3 எந்நேரமும் அருகில் இருக்கும் ஐபோனுடன் இணைந்திருக்கும்.

ஐபோனினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டால், புதிய வாட்ச் 3 கொண்டு அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட சேவைகளை வாட்ச் – கொண்டே பயன்படுத்த முடியும். இசிம் கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் புதிய வாட்ச் 3 கையில் மினி ஐபோன் போன்று வேலை செய்யும்.

– ஜியோவின் இந்த சேவை ஐபோன் பயனர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதாகவும் ஜியோ அறிவித்துள்ளது.

– ஏர்டெல் சார்பிலும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலில் ஏர்டெல் சேவைகளை ஆக்டிவேட் செய்ய முதலில் தங்களது ஐபோனினை ஐஓஎஸ் 11.3 மற்றும் வாட்ச் ஓஎஸ் 4.3 இயங்குதளங்களுக்கு அப்டேட் செய்ய வேண்டும். இனி ஐபோனின் செட்டிங்ஸ் — ஜெனரல், — அபவுட் சென்று புதிய கேரியர் செட்டிங்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஆப்பிள் வாட்ச் 3 இ-சிம் பயன்படுத்தும் என்பதால், தனியாக பிரத்யேக சிம் தேவைப்படாது. ஜியோ அறிவித்திருக்கும் ஜியோஎவ்ரிவேர்கனெக்ட் (JioEverywhereConnect) சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை கொண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் அப்கிரேடு செய்யப்பட்ட டூயல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 70% வரை வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வரை வேகமான வைபை இணைப்பை வழங்கும். இத்துடன் 50% வரை சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி, 18 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.

இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலின் விவை அறிவிக்கப்படாமல் உள்ளது. வெளியீட்டுக்கு முன் இதன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories