கழிவறை கட்ட ரூ.100 கோடி: கேரளத்துக்கு வழங்குகிறார் அமிர்தானந்த மயி

கொல்லம்:
கேரளத்தில் கழிவறை வசதிகளை பரவலாக்க, கழிவறைகளைக் கட்ட ரூ.100 கோடி அளிப்பதாக அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்த மயி மடம் உள்ளது. இங்கே வைத்து அமிர்தானந்த மயி தனது 62-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் கழிவறைகளைக் கட்டுவது மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என அமிர்தானந்த மயி அறிவித்தார். அத்துடன் அதற்கான உத்தரவாதத்தை முதல்வர் சாண்டியிடம் வழங்கினார்.

இது குறித்து அமிர்தானந்த மயி குறிப்பிட்ட போது, “வளர்ச்சி, வறுமை என இந்தியாவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு முகம் அறிவியல், தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்றொரு முகம் வறுமை, கல்லாமை, உடல்நலக் குறைவு, பெண்களுக்கு எதிரான குற்றம், சுகாதாரமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நம் நாடு வல்லரசாக வேண்டுமானால் இந்த இரண்டு முகங்களையும் அழகான முகமாக இணைக்க வேண்டும்” என்றார்.

முதல்வர் உம்மன் சாண்டி இதுகுறித்துப் பேசும் போது, “மாதா அமிர்தானந்த மயி மடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சேவையால் சாதி, மத, இன, பாலின பேதமின்றி அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு அமிர்தானந்த மயி மடம் ஏற்கெனவே ரூ.100 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories