வறுமை ஒழிப்புக்கு முதலிடம்: கலிபோர்னியாவில் மோடி உரை

சிலிகான் வேலி:

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சிலிகான் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக சாப் மையத்தில் கூடியிருந்த இந்தியர்களிடையே உரை ஆற்றினார். குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று சொல்லி, தனது பேச்சைத் தொடங்கிய மோடி, 80 கோடி இந்திய இளைஞர்களால் சாதிக்க முடியவில்லை என்றால் வேறு யாராம் முடியும் என்று வினவினார்.

அவரின் உரையிலிருந்து…

குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்று இங்கு செப்டம்பர் 27ம் தேதி மாலை. இந்தியாவில் செப்டம்பர் 28ம் தேதி காலை நேரம். இன்று இந்தியாவின் தீரப் புதல்வன் மாவீரன் பகத் சிங்கின் பிறந்த நாள். அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

கலிபோர்னியாவுக்கு நான் 25 வருடங்களுக்குப் பின்னர் வந்துள்ளேன். இப்போது பல்வேறு மாற்றங்களையும் பல புதுமுகங்களையும் இங்கே பார்க்கிறேன். வலிமை வாய்ந்த இந்தியாவின் மாற்றத்தை கலிபோர்னியாவில் பார்க்கிறேன். அமெரிக்கர்கள் இங்கே இந்திய வம்சாவளியினரைப் பார்த்து பெருமை கொள்கிறார்கள். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

19ஆவது நூற்றாண்டில் எனது சீக்கிய சகோதரர்கள் அமெரிக்கா வந்தனர். விவசாயிகளாக வந்த அவர்கள் இந்தியாவின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். இப்போது 21வது நூற்றாண்டு. இப்போது எனது மக்கள் வறுமையை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர். தனது இளமைக் காலத்தை சுதந்திரத்திற்காக காவு கொடுத்த ஒருவர் எனது நாட்டில் இருந்தார். காந்தி கூறிய கோட்பாடுகளின்படி அவர் வாழ்ந்து காட்டினார். 1975இல் நெருக்கடி நிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜெயப் பிரகாஷ் நாராயண். படிப்பதற்காக கலிபோர்னியாவுக்கு வந்தவர் ஜெயப் பிரகாஷ் நாராயண்.

இந்தியாவுக்கும் கலிபோர்னியாவுக்குமான உறவு தொன்று தொட்டு வருகிறது. இந்த நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது. இது மோடியால் ஏற்பட்டதல்ல… 120 கோடி இந்தியர்களால் சாத்தியமான மாற்றம். மோடி வந்து 16 மாதமாகி விட்டது. உங்களது சான்றிதழை எதிர்பார்க்கிறேன். நான் சரியாக வேலை செய்துள்ளேனா? வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், உடலின் ஒவ்வொரு அணுவையும் நாட்டுக்காக பணியாற்ற அர்ப்பணித்துள்ளேன். நான் இந்தியாவுக்காக வாழ்வேன். இந்தியாவுக்காக சாவேன்.

முன்பு உபநிஷத்துகள்தான் இந்தியாவின் அடையாளமாக இருந்தன. இன்று அறிவியல் துறையில் இந்தியா புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை தொட்ட முதல் நாடு இந்தியாதான். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பினோம். நான் பிரதமராகப் பதவியேற்க தில்லி வந்தபோது 50 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கே இல்லை. இன்று 18 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. மின்னணு நிர்வாகம் என்பது எளிதான நிர்வாகம்.. செலவு குறைந்த நிர்வாகமும்கூட!

காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நான் வெகு சாதாரணமாகக் கூறியதை ஏற்று 30 லட்சம் இந்தியர்கள் அதை விட்டுக் கொடுத்தனர். அனைவருக்காகவும் நாங்கள் உருவாக்கியதுதான் “ஜாம்” (JAM). இதில் ஜே என்பது ஜன் தன் திட்டம். ஏ என்பது ஆதார் திட்டம். எம் என்பது மொபைல் கவர்னென்ஸ்.

உலகம் முழுவதும் இன்று பயங்கரவாதம் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கை கோத்து வருகின்றன. ஒவ்வொரு இந்தியரின் கனவும் நனவாக வேண்டும். 125 கோடி இந்தியர்களின் கனவும் நனவாக வேண்டும். என்னை இங்கு அழைத்த கலிபோர்னியா மாகாண ஆளுநருக்கும், காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் என் நன்றி.
– என்று தனது  உரையை நிறைவு செய்தார் மோடி.

தனது உரையை முடிக்கும் முன்பு, தனது வழக்கமான பாணியில் “பாரத் மாதா கி ஜே”, “ஜெய் வீர் பகத் சிங்” என்று கோஷமிடுமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார். அங்கே கூடியிருந்த அனைவரும் திருப்பிச் சொல்ல சாப் மையமே இந்த முழக்கத்தால் அதிர்ந்தது

சுமார் ஒருமணி நேரம் பேசிய பின்னர், முடிவில் மைக்கைத் திருப்பிய மோடி, “நான் ஒரு நல்ல தகவலைப் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டேன்…
டிசம்பர் 2ஆம் தேதி முதல் தில்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்துக்கு 3 நாட்கள் ‘நான்-ஸ்டாப்’ நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.  மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்கும். எனவே உலகிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமான சேவை என்ற பெயரும் இதற்குக் கிடைக்கும்.. என்றார்.

அமெரிக்காவில் இதுவரை நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா தனது சேவையை இயக்கி வருகிறது. தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது. சிலிக்கான் வேலியில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நீண்டகாலக் கோரிக்கை தற்போது மோடி பயணத்தை முன்னிட்டு நனவாக்கியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories