தாயை நினைத்து கண்கலங்கிய மோடி: பேஸ்புக் தலைமையகத்தில் உணர்ச்சிப் பெருக்கு

தாயைக் குறித்து தனது பேச்சில் நினைவுகூர்ந்த மோடி, தாம் பேசும்போது உணர்ச்சிப் பெருக்கால் கண் கலங்கினார். அந்த ஓரிரு நிமிடங்கள் பேஸ்புக் தலைமையகத்தில் நிசப்தம் நிலவியது.

நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு கலிபோர்னியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே மென்லோ பார்கில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அங்கிருந்தவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி.

அவருடைய பேச்சின் நடுவே சிரிப்பு, நகைச்சுவை, யதார்த்தமான உரையாடல் என எல்லாவற்றையும் காண முடிந்தது.

நாட்டின் வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், கிராமங்களை இணைப்பது, நாட்டின் வெளிப்படையான நிர்வாகம் இவை குறித்தெல்லாம் தனது பேச்சில் குறிப்பிட்டார் மோடி.

குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலம், தம்மால் மக்களுடன் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிவதாகவும், மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் இது அவசியம் என்றும், மக்களின் கருத்துகளை தம்மால் உடனுக்குடன் அறிந்து செயலாற்ற முடிவதாகவும் குறிப்பிட்டார்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

பெண்கள் , குழந்தைகள் குறித்த ஒரு பெண்மணியின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, எல்லா நாட்டிலும் கடவுளை ஆணாக வைத்திருக்கும் போது, நம் நாட்டில் மட்டுமே பெண் தெய்வங்களை வைத்திருக்கிறார்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மா என்று தெய்வம் பெண்ணாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

தனது பெற்றோர், குறிப்பாக அம்மாவும் மோடியின் இந்த உரையாடலைக் கேட்க பேஸ்புக் தலைமையகமான இங்கே வந்திருப்பதாக மார்க் குறிப்பிட்டார். உடனே அவர்களை எழுந்து எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டார் மோடி. அவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொன்ன பின்னர், மோடியின் தாயார் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு மார்க் கேட்டுக்கொண்டார்.

அப்போது, 95 வயதாகும் தனது தாயார் ஹீராபென்னை நினைவுகூர்ந்த மோடி, தனது தாய் தன்னை வளர்த்த விதம், அவர் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறும் போதே உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார். தான் சிறு வயதாக இருந்த போது, தாயார் வீட்டு வேலைகளைச் செய்து தன்னை வளர்த்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு பேசும் போது கண்கலங்கிய மோடி, மேற்கொண்டு சில நொடிகள் எதுவும் பேச முடியாமல், சிறிது நேரம் மவுனமாக இருந்தார். தொடர்ந்து, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய மோடி, இது நரேந்திரமோடிக்கு மட்டுமானதல்ல, இந்தியாவில் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் கனவுகளை நனவாக்க,  தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்கின்றனர் என்றார் மோடி.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

மோடியின் உணர்ச்சிப் பெருக்கான உரையால், பேஸ்புக் அலுவலகத்தில் ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

நான் நாட்டுக்காக உழைக்கிறேன். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன். இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும் உறுதியுடனும்  உற்று நோக்குகிறது என்று கூறி  விடைபெற்றார் மோடி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories