இந்திய வருமான வரி அலுவலகத்தில் குவிந்த வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள்

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவிததது.

கருப்பு பண விவரத்தை தெரிவிப்பதற்காக, டெல்லி வருமான வரி அலுவலக கட்டிடத்தின் 5-வது தளத்தில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று கடைசி நாள் என்பதால், காலையில் இருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிலர் நேரில் வந்திருக்க, வேறு சிலர் சார்பில் அவர்களின் ஆடிட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பித்தனர். ஒரு நபருக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆனது. ஆவணங்களை சரிப்படுத்தி வைக்க வருமானவரி அலுவலக ஊழியர் ஒருவர் உதவினார்.

முதலில், டெல்லியைச் சேர்ந்த தந்தை-மகன் வந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று விவரங்களை அளித்தனர். ராஜஸ்தான், கர்நாடகாவில் இருந்தும் வந்திருந்தனர். ஆனால், எவ்வளவு தொகைக்கு கணக்கு பெறப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சில ஆடிட்டர்கள், படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை படம் எடுத்து, யார் சார்பாக வந்திருந்தார்களோ, அவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி வைத்த வினோதமும் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நள்ளிரவு வரை மையம் செயல்படும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். நேற்று வரை கருப்பு பண விவரங்களை தெரிவித்தவர்களுக்கு ‘பெமா’ உள்ளிட்ட 5 சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது .

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories