தமிழகத்தில் திருகுதாள வேலை செய்யும் அதிமுக அரசு : கருணாநிதி குற்றச்சாட்டு

 

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு திருகுதாள வேலைகள் செய்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது. தங்களுக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரவையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பல்வேறு துறைகளிலிருந்து பதில்கள் வரவில்லை, வரவில்லை என்ற பதிலைத்தான் பேரவைத்தலைவர் தெரிவிக்கிறார். தொடர் கூட்டமே முடிந்து விட்டது. 48 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டதில், ஒன்று கூட அரசால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

300 கவன ஈர்ப்புத் தீர்மானங்களில் 14 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மட்டுமே பெயருக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்றால், எந்த அளவுக்கு மாநில மக்களின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியிலே முன்னுரிமை தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று டெல்டா மாவட்ட விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததைப் போல, கர்நாடக அரசு கை விரித்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 92 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா தர வேண்டும். கர்நாடக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் வரை 48 டி.எம்.சி. தண்ணீரை நமக்குத் தர வேண்டியுள்ளது. அக்டோபர் முதல் வரும் 2016 ஜனவரி வரை 47.5 டி.எம்.சி. தண்ணீரைத் தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் அங்கும் மழை இல்லாமல் வறட்சி நிலை நிலவுவதாகவும், தண்ணீர் தர இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவித்து விட்டார்கள். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

தமிழக அரசின் சார்பில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க தமிழக அரசு அதானி குழும நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்ததின் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை குறைந்த விலைக்கும், முறைகேடாகவும் இடைத் தரகர்கள் மூலமாக வாங்குகின்ற முயற்சி அங்கே நடைபெறுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆத்திரமடைந்து அதானி குழும ஊழியர்கள் இரண்டு பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகி மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பேரவையில் கடைசி நாளன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் ஒன்று பெண் எழுத்தாளருக்கு “அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் அளிக்கப்படவிருக்கிறதாம். அரசு என்ன, இவர்களுடைய சொந்தக்கட்சி உடைமையா? ‘அம்மா’ மாளிகை, ‘அம்மா’ மருந்தகம், ‘அம்மா’ தண்ணீர், ‘அம்மா’ உப்பு, ‘அம்மா’ சிமெண்டு, ‘அம்மா’ உணவகம், ‘அம்மா’ குடிநீர், ‘அம்மா’ அமுதம் பல்பொருள் அங்காடிகள், ‘அம்மா’ விதைகள், ‘அம்மா’ குழந்தை நலப்பரிசு பெட்டகம், ‘அம்மா’ முழு உடல் பரிசோதனை – என்ற வரிசையில் இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகளுக்குப் போட்டியாக, “அம்மா இலக்கிய விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் துணை மதிப்பீடுகள்கூட வெறும் 1,012.30 கோடி ரூபாய்க்குத்தான் கோரப்பட்டு ஒப்புதல் தரப்பட்டுள்ளது! மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது? இந்தத் தொடரில் அதாவது நான்கரை ஆண்டுகளில் முதல்-அமைச்சர் செய்த 181 அறிவிப்புகளுக்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? அந்தத்தொகையை எந்த நிதியிலிருந்து ஒதுக்கப் போகிறார்கள்? அந்த நிதிக்கு அவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? ஒப்புதல் பெறப்படா விட்டால் அவைகள் எல்லாம் நிறைவேறாத திட்டங்களா?

இந்தத்திருகுதாள வேலைகளையெல்லாம் புரிந்து கொண்டு தங்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்பதைக் கூர்ந்து கவனித்து, கணித்து, அதற்கேற்பச் செயல்பட முன்வர வேண்டுமென்பதுதான் மிகப்பெருவாரியான தமிழர்களின் விருப்பம். என கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில்கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories