பாலுமகேந்திரா பிரியர்களுக்காக இன்று ‘கதைகளின் நேரம்’

11 May18 balu mahendraa - 2026இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று பன்முகங்களை கொண்ட பாலுமகேந்திராவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரது மாணவர்கள் இன்று சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை, அப்படியே திரைப்பட காட்சிகளில் சித்தரிப்பதில் மிக நேர்த்தியான சிற்பி பாலு மஹேந்திரா என்று சொன்னால் அது மிகையாகாது. பாலுமகேந்திரா அவர்களின் இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன். இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் 1939 மே 20 ம் தேதி பிறந்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர். சிறுவயது முதல் தன்னிடம் இருந்த புகைப்பட ஆர்வ மிகுதியின் காரணமாக 1970- ல் பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்று தங்கப்பதக்கம் பெற்றார்.

நெல்லு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1971ம் ஆண்டு திரைத்துறைக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பாலுமகேந்திராவிற்கு, இத்திரைப்படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு 1972 ஆம் ஆண்டு வழங்கியது.

பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா. 1977-ல் கறுப்பு வெள்ளையில் கன்னடத்தில் வெளியான இந்தப் படம், கன்னடத்தில் மட்டுமல்ல, தமிழிலும் டப் செய்யப்படாமலேயே 100 நாட்களைக் கடந்து ஓடியது. பாலு மகேந்திரா மிகவும் நேசிக்கும், ரசிக்கும் நாயகன் கமல்தான் ஹீரோ, ஷோபா நாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடிகர் மோகன் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

1978 ல் தமிழில் வெளிவந்த “முள்ளும் மலரும்” என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்கிய முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள். டீனேஜில் இருக்கும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை அரிதாரங்கள் பூசாமல் அப்படியே பதிவிட்டதால் என்னவோ இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதனை தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்க்க முடிந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பின்னர் இயக்கிய மூடு பனி படம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்தார். இந்த படத்திற்கு பின் பாலு இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படத்திற்கும் இசையமைத்தவர் இளையராஜா, இதில் பிடிவாதமாக இருந்தவர் பாலு என்ற பாலுமகேந்திரா.

பாலு மகேந்திராவின் மாஸ்டர் பீஸ் என்றால் அது மூன்றாம் பிறை தான். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை தன்னுடைய கேமரா கண்களின் மூலம் நம் மனதில் பதிவு செய்திருப்பார் பாலு. கதாநாயகன் கமல், ஸ்ரீதேவியின் மீது வைத்திருக்கும் அன்பை காதல் என்று கூறிவிட முடியாத அளவிற்கு காட்சிகளை செதுக்கி இருப்பார் பாலுமகேந்திரா. இதில் இளம் வயது கதாநாயகி, கதாநாயகனை நெருங்கும் நேரத்தில், அவன் விலகி செல்லும் பொழுது கதாநாயகனின் கண்ணியம் வெளிப்பட்டிருக்கும்.

இதுவரை இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு இணையான காட்சி தமிழ் சினிமாவில் வரவில்லை என்று கூறலாம். கமல், ஸ்ரீதேவியின் அபார நடிப்பு இருவரையும் உச்சத்துக்குக் கொண்டு போன இப்படம், இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள் உள்பட 6 விருதுகளை பெற்றது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இவ்வாறு தொடர்ந்து, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டை வால் குருவி, வீடு, வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதி லீலாவதி, அது ஒரு கனா காலம், தலைமுறைகள் போன்ற தனது ஒவ்வொரு படைப்பிலும் எதார்த்தங்கள் ததும்பியதால் என்னவோ ரசிகர்களுக்கு இவை தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை.

இந்திய சினிமாவின் போற்றத்தக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் பட்டறையில் பயின்ற மாணவர்கள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் ‘கதைகளின் நேரம்’ என்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் இன்று மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பாலு மகேந்திரா இயக்கிய ‘நிலம்’ குறும்படம் முதலில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ச்சியாக பட்டறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமி, எ.எல்.விஜய், விஜய் மில்டன்,பாலாஜி ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணி, முரளி தயாரிப்பாளர் தனஞ்செயன்,பாலாஜி தரணீதரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கிறார்கள்

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories