விவசாயிகளிடம் குறைகளை கேட்க ஆலமரத்தடியில் பட்டறையை போட்ட ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நமக்கு நாமே விடியல் மீட்பு நடைபயணம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருகே ஆலமரத்தடியில் அமர்ந்து அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். சென்னையை சேர்ந்த மறமடக்கி பகுதியில் விவசாய தொழில் செய்து வரும் வெங்கட் கூறியதாவது:–

இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை ஊக்குவிக்கவோ, காப்பாற்றவோ அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது என்றார்.

இதையடுத்து காமராஜ் என்ற விவசாயி பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கி விவசாயிகளின் குறைகளை போக்கியது தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். இங்கிருந்து வடகாடு பக்கம் சென்றால் ஏராளமான மிளகாய் மண்டியும், 250 கடலை மில்லும் உள்ளன. அவை அனைத்துமே இன்று செயல்படமுடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி ஆயிரம் ஆண்டு மரம் கூட பெயர்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு எந்தவித சலுகையும் தராத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு உள்ளது என்றார்.

இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பு தி.மு.க. தலைவர் கலைஞரிடம் கருத்து கேட்க சென்றேன். அப்போது நாளை கூறுகிறேன் என்று என்னை அனுப்பிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு மறுநாள் என்னை அழைத்து இந்த சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததோடு, பயணத்திற்கு நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் என்ற பெயரும் வைத்தார்.

தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சி தான், அதுவும் காணொலி காட்சி தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை, படுத்த நிலையில் உள்ளது. அதையும் தாண்டி கோமா நிலையில் உள்ளது. எனவே தான் தமிழக மக்களை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 3 கட்ட பயணத்தில் முதல் கட்டத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வந்துள்ளேன்.

பயணம் தொடங்கிய நாள் முதல் காலை 8 மணி முதல் இரவு வரை மக்களை சந்தித்து வருகிறேன். அறந்தாங்கியில் இன்று காலை சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதல் அனைத்து தரப்பினரும் பல்வேறு குறைகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் குறைகள் போக்கப்படும் இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories